search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening of the Gate of Heaven"

    • சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை உலக நன்மைக்காக ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து நம்மாழ்வார் வரவேற்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வாசலுக்கு முன்பு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா நாராயணா, என்று கோஷமிட்டனர்.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை வலம் வந்து தீவட்டி ஊர்வலத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. அதிகாலை என்பதால் பக்தர்களுக்கு சுவாமி உருவம் கூட தெரியவில்லை. உபயதாரர் சிவஞானம்பிள்ளை குடும்பத்தினர் பிரசாதம் வழங்கினர். நவநீத கிருஷ்ணானந்த கொண்டல்ரவ்த் பாண்டுரங்க பஜனை குழுவினர், சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

    ×