என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Opening of paddy"
- 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- விவசாயிகள் என்ற பெயரில் போலியாகவும் வியாபாரிகள் மூலமும் நெல்லை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி பாசன வாய்காலில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
நடப்பாண்டு கீழ்பவானியில் தண்ணீர் திறப்பு உரிய நேரத்தில் நடந்தாலும், ஆங்காங்கே முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் உடைப்பு ஏற்பட்டது.
அதனை விரைவாக சீரமைக்காததால் பல நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் மழை கை கொடுத்ததால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் நடந்து வருவதால் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழு அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.
வரும் வாரங்களில் மேலும் சில இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கூடுதல் நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது:
கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடப்பதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உடன் திறந்து முழு அளவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல் கொள்முதலுக்கு கடந்த காலங்களில் நடந்த தவறுகள் இந்தாண்டு நடக்காமல் தொடக்கம் முதல் தடுக்க வேண்டும்.
குறிப்பாக சாக்கு எடை எனக்கூறி மூட்டைக்கு 10 ரூபாய் விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகள் என்ற பெயரில் போலியாகவும் வியாபாரிகள் மூலமும் நெல்லை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்