search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ooty kanthal"

    • இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார்
    • இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.

    ஊட்டி

    காந்தல் விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தட்சிணாமூர்த்தி மடம் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார், 5 ஏக்கர் நிலப்பரப்பில் துளசிமடம் எனப்படும் தட்சிணாமூர்த்தி மடம் அமைந்து உள்ளது. கடந்த, 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. Also Read - மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை Powered By இதன்பின்னர் பேரூர் ஆதீனம் மடாதிபதி மருதாச்சல அடிகளார், தட்சிணாமூர்த்தி மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், அவரை நீக்கி, மதுரை சொக்கலிங்க தம்பிரான் மடாதிபதி, நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார். இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மடாதிபதி மருதாச்சல அடிகளார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் கோவில் நிர்வாக பணிகளை கவனிக்கலாம் என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க வரவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பக்தர்கள் எதிர்ப்பு இதைத்தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் அஸ்வினி, உதவி கமிஷனர்கள் கருணாநிதி விமலா, மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கோவை பேரூர் ஆதீனம் பொறுப்பேற்க நேற்று காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தார். அப்போது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.  ஆனாலும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதால், போலீசார் பாதுகாப்புடன் மருதாசல அடிகளாரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். மேலும் கோவிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதன் பின்னர் அவர் காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
    • அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி நகா்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினாா். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    அரசினா் தாவரவியல் பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்றப்பட்ட 178 கடைகளில் தற்போது 55 பேருக்கு மட்டுமே கடை கட்டித் தரப்படுகிறது. இதை மாற்றி அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கடைகளை ஒதுக்கும்போது உண்மை–யான பயனாளிகளை அடையாளம் கண்டு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.பெரிய வணிக நிறுவனங்களின் விதி மீறலை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

    அடுத்த மழைக் காலத்துக்குள் காந்தல் கால்வாயை தூா்வாரி சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீா் தேங்குவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காந்தல் பகுதியில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீா் இணைப்பு இல்லாததால் 5 மாதமாக உபயோகம் இல்லாமல் உள்ளது. மாா்லிமந்து அணை தண்ணீா் மிகவும் கலங்கலாக வருகிறது.கோழிப் பண்ணை, மாா்லிமந்து பகுதிகளில் புலி நடமாட்டம் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை.

    இதற்கு பதில் அளித்து ஆணையா் காந்திராஜன் பேசுகையில், இப்பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் அடுத்த மாதம் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்துக்கு மின்விளக்குப் பணிகள் ஒப்பந்ததாரா் நேரில் வரவ–ழைக்கப்படுவாா் என்றார்.

    இதற்கிைடயே தமிழகத்தில் தி.மு.க அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.இதில் கவுன்சிலர்கள் ஜாா்ஜ், கே.ஏ.முஸ்தபா, தம்பி இஸ்மாயில், அபுதாகீா், கீதா, வனிதா, முஸ்தபா, விஷ்ணு, ரகுபதி, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, ரவிக்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×