search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councillors' demand"

    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
    • அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி நகா்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினாா். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    அரசினா் தாவரவியல் பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்றப்பட்ட 178 கடைகளில் தற்போது 55 பேருக்கு மட்டுமே கடை கட்டித் தரப்படுகிறது. இதை மாற்றி அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கடைகளை ஒதுக்கும்போது உண்மை–யான பயனாளிகளை அடையாளம் கண்டு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.பெரிய வணிக நிறுவனங்களின் விதி மீறலை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

    அடுத்த மழைக் காலத்துக்குள் காந்தல் கால்வாயை தூா்வாரி சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீா் தேங்குவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காந்தல் பகுதியில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீா் இணைப்பு இல்லாததால் 5 மாதமாக உபயோகம் இல்லாமல் உள்ளது. மாா்லிமந்து அணை தண்ணீா் மிகவும் கலங்கலாக வருகிறது.கோழிப் பண்ணை, மாா்லிமந்து பகுதிகளில் புலி நடமாட்டம் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை.

    இதற்கு பதில் அளித்து ஆணையா் காந்திராஜன் பேசுகையில், இப்பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் அடுத்த மாதம் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்துக்கு மின்விளக்குப் பணிகள் ஒப்பந்ததாரா் நேரில் வரவ–ழைக்கப்படுவாா் என்றார்.

    இதற்கிைடயே தமிழகத்தில் தி.மு.க அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.இதில் கவுன்சிலர்கள் ஜாா்ஜ், கே.ஏ.முஸ்தபா, தம்பி இஸ்மாயில், அபுதாகீா், கீதா, வனிதா, முஸ்தபா, விஷ்ணு, ரகுபதி, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, ரவிக்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×