search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on avoiding the use and"

    • பிளாஸ்டிக் பைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • காணொலி விளக்கக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகிலுள்ள கடைகளில் "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதையும்,

    விற்பனை செய்வதையும் முற்றிலும் தவிர்ப்பது" தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகம்,

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், பெருந்துறை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சுற்றச்சூழல் பொறியாளர் (பெருந்துறை) உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் குறித்து காணொலி விளக்கக்காட்சி மூலம் விழிப்புணர்வும், சட்ட விதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் கோவில் வளாகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்கான நடவடி க்கைகளை மேற்கொ ள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்புக ளில் மீண்டும் மஞ்சப்பை தொடர்பான விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டினை கட்டுப்படுத்தவும் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அதன் விபரங்களை வாரி யத்திற்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிமுகப்படு த்தப்ப ட்டுள்ள வலை தளத்தில் நெகிழி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்படும்போது அதன்மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை வலைத ளத்தின் வாயிலாக தெரிவி க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அன்னக்கொடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கிருஷ்ணசாமி,செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×