search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI World Cup Series"

    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
    • இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அகமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்ததாக ஸ்டோரி வைத்துள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
    • அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் வரவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக விளையாட முயற்சி செய்வோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் முற்றிலும் மாறுபட்ட மனநிலையுடனும் அணுகுமுறையுடன் களமிறங்குவோம். நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம். வீரர்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாட வேண்டாம். வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என முயற்சிப்போம்.

    இந்த போட்டி முக்கியம். இந்த தொடர் முக்கியம் என நினைத்து விளையாடுகிறோம். ஆனால் எதுவும் சரியாக நடக்கவில்லை.

    எனவே இந்த உலக கோப்பை தொடரில் நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுடுவோம். எங்களின் முழு கவனமும் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிப்பதில் இருக்கும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தகுதிச்சுற்றுக்கான அணியை அறிவித்துள்ளது.
    • தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னணி அணிகளில் ஒன்றான வெஸ்ட் இண்டீஸ் தகுதிச்சுற்றில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    1975 மற்று 1979-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 ஒருநாள் உலக கோப்பைகளை வென்றதுடன், டி20 உலக கோப்பையையும் 2 முறை வென்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாததே பெரும் பின்னடைவுதான்.

    இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பைக்கு தகுதிபெற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றில் ஆடவேண்டியுள்ள நிலையில், தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷேய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல், ஷமர் ப்ரூக்ஸ், யானிக் காரியா, கீஸி கார்ட்டி, ரோஸ்டான் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெஃபெர்டு.

    ×