search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutritionist"

    • 40 பவுன் நகைகளை அள்ளி சென்றனர்
    • பூட்டை உடைத்து துணிகரம்

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம் பட்டு அடுத்த பெருங்குளத்துாரைச் சேர்ந்தவர் தண்டபாணி (55). இவர் மனைவி அம்சா. சத்துணவு அமைப்பாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டை உ ட்புற மாக பூட்டிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் மாடியில் உள்ள அறையில் தண்ட பாணி படுத்து துாங்கினார். பின்னர், நேற்று காலை கீழே இறங்கி வந்தபோது, வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பதறியபடியே பீரோ வைத் துள்ள அறையில் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    மேலும், அதிலிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ஹாலில் இருந்த டிவி ஆகி யவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.

    அதேபோல், அருகில் வசிக்கும் சக்கரபாணி என் பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு பீரோ வில் இருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மேலும், அதே பகுதி யில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு, பீரோ வில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் ரூபாய் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக, பாதிக்தனியே போலீஸ் ஸ்டேஷனில்கப்பட்ட 3 பேரும் தனித் தானிப்பாடி புகார் கொடுத்தனர். அதன் பேரில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட் சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீ சார் அங்குவந்து, திருட்டு நடந்த வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவில் அடுத் தடுத்து 3 வீடுகளில் நகை, டிவிகள் மற்றும் பணம் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

    மக்கள் கோரிக்கை த ண்டராம்பட்டு, தானிப்பாடி ஆகிய பகுதி களில் இதுபோன்று வீடு - புகுந்து கைவரிசை காட்டும் சம்பவம் அடிக்கடி நடப்பதால், போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும். மேலும், தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எல் லைக்கு உட்பட்ட பெருங் குளத்தூர் பகுதியில் காப் புக்காடு இருப்பதால் நகை திருடும் மர்ம நபர்கள் அந்த காட்டுக்குள் சென்று பதுங் கிக்கொள்வதாக கூறப்படு கிறது. எனவே, இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத் தில், எஸ்பி தனிக்கவனம் செலுத்தி தண்டராம்பட்டு, தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற திருடு சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • அம்மாபேட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கரப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

     அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை திருநெறி தமிழ் மன்றம் நிர்வாகி ருக்மணிஆச்சி நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாபேட்டை அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், திருநெறி தமிழ் மன்ற நிர்வாகி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கரப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்த ஏராளமான நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவிலியர் சித்ரா, கிராம செவிலியர்கள் சரளா, சர்மிளா, வினோதினி, மஞ்சுளா. கண்ணையன், கண்ணன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்ஏற்பாடுகளை திருநெறி தமிழ்மன்றம் நிர்வாகி ராமநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×