என் மலர்
நீங்கள் தேடியது "nutrition employee house jewelry robbery"
குடியாத்தம் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி பானுமதி (வயது 55). சத்துணவு ஊழியர். பானுமதி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை தரிசிக்க சென்றுவிட்டார்.
திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கினார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.7,500 பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #Tamilnews
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி பானுமதி (வயது 55). சத்துணவு ஊழியர். பானுமதி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை தரிசிக்க சென்றுவிட்டார்.
திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கினார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.7,500 பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #Tamilnews






