search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "N.R.Dhanabalan"

    • மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற 6-ந் தேதி வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
    • கிராமங்களுக்கு நேரடியாக சென்று நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுரண்டை:

    மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் அவரது தலைமையில் மூன்று பனைமரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    என்.ஆர்.தனபாலன் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தென்காசி மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் சுரண்டை எஸ்.வி.கணேசன் தலைமையில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேவிப்பட்டணம், தெற்கு சத்திரம், ராயகிரி, டி.ராமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் அகரகட்டு லூர்து நாடார், முன்னாள் நாடார் மகாஜன சங்க இயக்குனர்கள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன், வேட்பாளர்கள் கே.வி.கண்ணன், சேர்மராஜ் மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்கு பொது செயலாளராக போட்டியிடும் வேட்பாளர் என்.ஆர்.தனபாலன்
    • தமிழ்நாடு பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பல்வேறு நாடார் சங்கத்தினரை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில், மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்கு பொது செயலாளராக போட்டியிடும் வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அவரது அணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை தொழிலதிபர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். மதுரை நாடார் மகாஜன சங்க முன்னாள் இயக்குனர்கள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நாடார் வாலிபர் சங்க பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி வரவேற்றார்.

    தமிழ்நாடு பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், கே.டி.பாலன், வக்கீல் சின்னத்தம்பி மற்றும் நிர்வாகிகள் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை எஸ்.தங்கையா நாடார், சுரண்டை காமராஜர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் காய்கனி மார்க்கெட் நிர்வாகிகள் ஏ.கே.எஸ்.சேர்மசெல்வன், ஏ.ஜி.கணேசன், சரத் மாடசாமி உள்பட பல்வேறு நாடார் சங்கத்தினரை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

    ×