search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல்: என்.ஆர்.தனபாலனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
    X

    என்.ஆர்.தனபாலனை ஆதரித்து வாக்கு சேகரித்த காட்சி


    மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல்: என்.ஆர்.தனபாலனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

    • மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற 6-ந் தேதி வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
    • கிராமங்களுக்கு நேரடியாக சென்று நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுரண்டை:

    மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் அவரது தலைமையில் மூன்று பனைமரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    என்.ஆர்.தனபாலன் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தென்காசி மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் சுரண்டை எஸ்.வி.கணேசன் தலைமையில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேவிப்பட்டணம், தெற்கு சத்திரம், ராயகிரி, டி.ராமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் அகரகட்டு லூர்து நாடார், முன்னாள் நாடார் மகாஜன சங்க இயக்குனர்கள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன், வேட்பாளர்கள் கே.வி.கண்ணன், சேர்மராஜ் மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×