search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nostalgia"

    • விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார்.
    • படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி. மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அணில்குமார் (வயது 21). இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். மேலும், போலீஸ் அதிகாரி தொடர்பான தேர்வு எழுத படித்தும் வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார். அங்கிருந்து இரவு 10 மணியளவில் வீடு திரும்பினார். சாப்பிட்டுவிட்டு படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.

    நள்ளிரவு 1 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்துள்ளார். அப்போது அணில்குமார் வீட்டின் தோட்டத்தில் உள்ள தேக்குமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். சத்தம்போட்டு அணில்குமாரின் பெற்றோரை பக்கத்து வீட்டுக்காரர் அழைத்தார். அனைவரும் சேர்ந்து அணில்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அணில்குமார் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா? அல்லது போலீஸ் ஆக முடியவில்லை என்ற ஏக்கமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×