search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north state person"

    கோவையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் தடாகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது ரசீது (34), அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது சமீர் (33) என்பதும் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் ஜவுளி வியாபாரி போலவும், செல்போன் விற்பனை செய்பவர்கள் போலவும் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் இருவரும் சில செல்போன்களை எடுத்து கொண்டு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதும், அங்குள்ள வாலிபர்களிடம் குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக கூறி அதனை வாங்கும் வாலிபர்களிடம் பணத்தை பெற்று கொண்டு செல்போனை மடித்து கொடுக்கும் போது செல்போன் மூடியை மட்டும் கொடுத்து நூதன முறையில் பணம் பறித்துள்ளனர்.

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராசிபுரத்தில் துணி கடை அதிபர் வீட்டில் பொருட்களை திருட முயன்ற வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம்  ஆட்டையாம்பட்டியில் ராசிபுரம் மெயின் ரோட்டில் துணி கடை அதிபர் சேகர் என்பவரின் வீடு உள்ளது. இவர் நேற்றிரவு வழக்கம் போல கடைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பினார். 

    அப்போது வீட்டின் முன் பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2 பேரும் வெளியில் தப்பியோடினர். 

    இதை பார்த்த அந்த பகுதியினர் 2 பேரையும்  சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆட்டையாம்பட்டி போலீசில் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் 21, ஜோத்சிங் 26 என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொங்கணாபுரம் பகுதியில் டீ கடை நடத்தி வருவதாகவும்  போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×