search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "News Reader"

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது
    • இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அதிக வெப்ப தாக்கத்தினால் தூர்தர்சனின் கொல்கத்தா பிரிவில் செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் லோபமுத்ரா சின்ஹா ஸ்டுடியோவிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

    இது தொடர்பாக லோபமுத்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "செய்தி வாசிக்கும் அறையில் உள்ள ஏர் கண்டிஷனர் சரியாக வேலை செய்யவில்லை.இதனால், ஸ்டுடியோவில் அதிக வெப்பம் காணப்பட்டது. நான் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வரவில்லை. என்னுடைய 21 வருட பணி அனுபவத்தில், 15 நிமிடங்கள் அல்லது அரை மணிநேர ஒளிபரப்பில், எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

    ஆனால், இந்த முறை செய்தி வாசித்து முடிக்க 15 நிமிடங்கள் மீதமிருக்கும்போதே, வறட்சியாக உணர்ந்தேன். டி.வியில் வேறு செய்தி ஓடியபோது, மேலாளரிடம் தண்ணீர் பாட்டில் தரும்படி கேட்டேன். தண்ணீர் குடித்து முடித்ததும் மீதமுள்ள செய்தியை வாசிக்க வேண்டி இருந்தது.

    வெப்ப அலை செய்தியை வாசித்து கொண்டிருந்தபோது, பேச முடியாமல் திணறினேன். பேசி முடித்து விடலாம் என முயன்றேன். டெலிபிராம்ப்டரும் மங்கிப்போனது. எனக்கும் இருண்டதுபோல் தோன்றியது. அப்போது, அப்படியே மயங்கி நாற்காலியில் சரிந்து விட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

    அப்போது சிலர் ஓடி வந்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் நினைவு திரும்ப உதவினர். இந்த வெப்ப சூழலில் பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

    ×