என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Newcomer dies"
- தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
- குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் அருள்குமார் (வயது 33) என்பவரும் கோழிப்பண்ணை வைத்து உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்தது.
நேற்று அருள்குமார் வழக்கம்போல் பண்ணைக்கு வேலைக்கு வந்தார். அங்கு விவசாய பணிகளை முடித்து விட்டு கை கழுவுவதற்காக சின்னஆறுவ செட்டியார் தோட்டத்தில் உள்ள பண்ணைக்குட்டைக்கு சென்றார்.
அப்போது எதிர்பாரா தவிதமாக நிலை தடுமாறி அவர் குட்டையில் தவறி விழுந்தார். நீரில் விழுந்த அவர் மூச்சுத்திணறி குட்டையிலேயே உயிரி ழந்தார்.
தோட்டத்துக்கு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி குடும்பத்தினர் சென்றனர். அங்கு குட்டையில் விழுந்து அருள்குமார் இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி அருள்குமாரின் பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆன 6 மாதத்தில் அருள்குமார் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்