search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new regulations"

    • வகுப்பறையில் செல்போன்கள் எரிச்சலூட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்
    • நல்ல கல்வியை குழந்தைகள் பெற நாம் சூழலை உருவாக்க வேண்டும் என்றார் சுனக்

    இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    முக்கியமான உரையாடலின் போது மொபைல் போன் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது.

    பல பள்ளிகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு உதவ நமது கல்வி துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என புகார் அளித்தனர்.

    மொபைல் போன்கள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது. எங்கெல்லாம் வகுப்புகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.

    எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்றல் நேரம் குறைவதை தவிர்க்க, கல்வி துறை வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் ஒன்றாக, குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்து குழந்தைகள் செல்லும் போது திரும்ப வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முடியும் நேரம் வரை மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை தடுக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.

    இங்கிலாந்தில் 12 வயதை எட்டிய 97 சதவீத குழந்தைகளின் கைகளில் செல்போன் உள்ளது.

    கடந்த வருடம், ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டிற்கான அமைப்பு (UNESCO) பள்ளிகளில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிப்பதால், குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் இனி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். இந்த நடவடிக்கையால் பட்ட வகுப்பு ஆசிரியர்கள், இனி பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “கல்லூரிகளில் உதவி பேராசிரியர் (செலக்சன் கிரேடு) பதவி உயர்வுக்கு 2021 ஜூலை மாதம் முதல் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல்கலைக்கழகங்களில் நேரடியாக உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்படுவதற்கும் முனைவர் பட்டம் 2021 ஜூலை மாதம் கட்டாயம் ஆகிறது” என்று கூறினார்.

    மேலும், பல்கலைக்கழக மட்டத்திலான ஆசிரியர்களுக்கு (அதாவது, முதுநிலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறவர்களுக்கு) கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  #PrakashJavadekar #tamilnews 
    ×