search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai. VK Puram"

    • முப்பெரும் விழாவில் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.
    • சிறப்பு விருந்தினர்களுக்கு தாய்சீனிஸ் தியேட்டர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    விக்கிரமசிங்கபுரம் வணிகர் சங்க கொடியேற்று விழா, புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கல்வி பரிசளிப்பு என முப்பெரும் விழா அசிசி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா , நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ், மாவட்ட தலைவர் செல்வராஜ், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜன், வள்ளிமயில் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு வி.கே.புரம் வணிகர்கள் சங்க தலைவர் பீட்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    சேக் அலி, ஜெயகுமார், முருகேசன், பிரபாகரன், தங்கதுரை, ஹரி, மனோகரன், அபுல் கலாம் ஆசாத், சிற்றரசன், மவுதுகனி, அய்யலுசாமி, டேவிட் பெரியசாமி, இசக்கி, அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழா குழு தலைவர் குட்டி கணேசன் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் பொன்ராஜ் தொகுத்து வழங்கினார். வர்த்தக சங்க தீர்மானங்களை ஜவகர், காசிராஜன், செல்லத்துரை ஆகியோர் வாசித்தனர்.

    சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர், விக்கிரம சிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பை ஒன்றிய துணைத் தலைவர் ஞானக்கனி, வி.கே.புரம் நகராட்சி துணைத் தலைவர் திலகா சிற்றரசன், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், அடையகருங்குளம் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மதன கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் வர்த்தக சங்க தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல ரூ.30 வசூலிப்பதை தடுக்க அரசிடம் வலியுறுத்துவோம். நெல்லையில் இருந்து பாபநாசம் வர சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்பார்கள். ஆனால் தற்போது 1½ மணி நேர ஆகிறது. எனவே சாலைப்பணிகளை விரைவாக முடிக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசுவேன் என்றார்.

    விழாவில் அகஸ்தியர் அருவி கட்டணம் ரத்து, நெல்லையில் இருந்து புறப்படும் அந்தியோதியா ரெயிலை அம்பை வழியாக நெல்லை - செங்கோட்டை செல்லும் ரெயிலுடன் இணைக்கும் விதமாக 5.20 அந்தியோதியா ரெயிலை நெல்லையில் இருந்து இயக்க கோருதல் உள்பட சுமார் 11 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு தாய்சீனிஸ் தியேட்டர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நகர வணிகர்கள் அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    ×