search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "N.E.C. college"

    • அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியை சர்வதேச அளவில் 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது
    • 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    கோவில்பட்டி:

    சர்வதேச அளவில் நடைபெறவுள்ள போட்டியில் கோவில்பட்டி என்.இ.சி. கல்லூரி மாணவர் பங்கேற்ற அணி தகுதி பெற்றுள்ளது.

    அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியை சர்வதேச அளவில் 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஆஸ்திரேலியா, பிரேசிலிய, கனேடிய, ஐரோப்பிய, பராகுவே ஆகிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், தேசிய விண்வெளி செயல்பாடுகள் ஆணையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மெக்சிகன் விண்வெளி ஏஜென்சி, அர்ஜென்டினா, பஹ்ரைனின் தேசிய விண்வெளி அறிவியல் நிறுவனம், தென்ஆப்ரிக்கா தேசிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இந்திய அளவில் இம்மாதம் 1, 2-ந்தேதிகளில் நடைபெற்ற கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவர் குருபிரசாத் டீம் சிங்குளாரிட்டி எனும் குழுவில் இடம்பெற்று ஆக்குமெண்டேட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கணினி தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்து சமர்ப்பித்திருந்த செயலி, படைப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசை வென்று சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதில் இந்தியா அளவில் 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது படைப்புகளை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற குழுவில் இடம் பெற்றிருந்த மாணவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    மேலும் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல் மற்றும் துறைத் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டி, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினர்.

    ×