search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Welfare Service"

    • நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்

    எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • காவாலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் உழவாரப் பணி நடைபெற்றது.

    திருவோணம்:

    திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நாட்டு நல பணி திட்டம் முகாம் நடைபெற்றது இதில் 5வது நாள் பணியாக காவாலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் உழவாரப் பணி நடைபெற்றது.

    மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் நிகழ்ச்சியில் ஆலத்தூர் தலைமை ஆசிரியர் ஜே.சி.ஐ, கருணாகரன் ஆளுமை பண்பு தொடர்பாக கருத்துரை வழங்கினார், விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தம்பிஅய்யன் தலைமை தாங்கினார், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சிவராஜா, முன்னிலை வகித்தார் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ராமமூர்த்தி விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

    ×