search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national museum"

    மும்பையில் 140 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். #NationalMuseum #IndianCinema #IndianCinemaNationalMuseum
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் உள்ள 19-ம் நூற்றாண்டு காலத்து அரண்மனையான குல்ஷன் மஹாலில் இந்திய தேசிய சினிமா தொடர்பானஅருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தில் நூறாண்டுகளை கடந்து வந்த இந்திய சினிமா தொடர்பான வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

    140 கோடியே 61லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்து பார்வையிட்டார். 

    இவ்விழாவில் மத்திய தவவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங், மத்திய சென்சார் வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி, பாலிவுட் நடிகர்கள் ஜீத்தேந்திரா, ரந்திர் கபூர், அமிர் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

    அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, திரைப்படங்களும், இந்த சமூகமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

    முன்னர், இந்தியாவின் வறுமை மற்றும் இயலாமையை நாம் திரைப்படங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால், பல லட்சம் பிரச்சனைகள் இருந்தாலும் பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அதற்கான தீர்வும் உள்ளது என்பதை பிரதிபலிக்கும் திரைப்படங்களை நாம் தற்போது பார்த்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். #NationalMuseum #IndianCinema #IndianCinemaNationalMuseum 
    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்த அர்ஷ் அலி என்ற 17 வயது சிறுவன் 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறையில் பணியாற்றி வருகிறார். #ArshAli #NationalMuseum #ArchaeologyDepartment
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் அர்ஷ் அலி. இவருக்கு சிறுவயது முதல் தொல்லியல் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.

    இதையடுத்து அர்ஷ் அலி தனது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம், 2015-ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் தொல்லியல் பணியை துவக்கினார். அதன்பின் டெக்கான் கல்லூரியைச் சேர்ந்த வசந்த் சிண்டேவுடன் இணைந்து சிந்து பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டார். இவர் சமீபத்தில் எகிப்தில் புத்த மதம் பரவியது குறித்து ஆய்வு செய்து, அதனை பற்றி, தேசிய அருங்காட்சியகத்திலும், உலக விரிவுரை தொகுப்பு நிகழ்ச்சியிலும் பேசியுள்ளார்.

    இந்நிலையில், இவர் தற்போது இந்திய வேதங்களை ‘ஹியரோக்ளிஃப்ஸ்’ எனப்படும் குறியீடு மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்து வருகிறார். அர்ஷ் அலி குறித்து பேசிய தேசிய அருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் பி.ஆர். மணி, 2015-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் முதல்முறை சந்தித்ததாகவும், அப்போதே முழுமையாக ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், அர்ஷ் அலி ஒரு ஆச்சரியமான சிறுவன் எனவும் பி.ஆர். மணி தெரிவித்துள்ளார். சிறுவர்களும், இளைஞர்களும் செல்போன் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நேரத்தை வீணடித்து வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உலக அளவில் தொல்லியல் துறையில் முன்னேறி வருவது நாட்டை பெருமையடையச் செய்கிறது. #ArshAli #NationalMuseum #ArchaeologyDepartment
    ×