search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Identity Card"

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.
    • 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை முகாம் நடைபெற்று வந்தது.

    இனி வரும் காலங்களில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மாதத்தின் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது செவ்வாய்க்கிழமைகளில் உத்திரமேரூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நடைபெறும் முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 போன்றவற்றுடன் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுங்கள்.

    • மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

    திருப்பூர்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.விழாவுக்குத் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைத்த பின்னா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் 13 வட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 59 மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 40 சதவீத மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், 75 சதவீதத்துக்கும் மேல் கை, கால் பாதிக்கப்பட்டோா் என மொத்தம் 5,670 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மாதந்தோறும் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 277 பேருக்கு நிகழாண்டு ரூ.8.37 லட்சம் வழங்கப்படவுள்ளது. அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

    இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் தின விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

    இந்த நிகழ்ச்சியில், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×