search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narcotics smuggling"

    • ரோந்து பணியில் போலீசாரை பார்த்து வாலிபர் ஒருவர் ஓடினார்.
    • சட்டை பையில் 50 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே மழவராயநல்லூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் செல்வகுமார் தலை மையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது போலீ சாரை பார்த்து வாலிபர் ஒருவர் ஓடினார். இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை செய்த தில் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது 22) என்பதும் அவரது சட்டை பையில் 50 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து மகேஷை கைது செய்தனர். 

    இதேபோன்று மணக்குப் பம் கூட்ரோடு அருகே திரு வெண்ணைநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி தலைமையிலான போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது திருக்கோவி லூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். போலீசார் அந்த வாலி பரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வாலிபரிடமிருந்து 225 பாக்கெட் ஹான்ஸ், 300 பாக்கெட் விமல், 240 பாக்கெட் வி.ஐ பாக்கு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் கொர க்கண் தாங்கல் பகுதியை சேர்ந்த கிரண்குமார் (20) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப் பதிந்து கிரணை கைது செய்த னர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×