search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallur"

    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின்தடை.
    • காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி, தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    கரடிவாவி துணை மின்நிலையம்: கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.

    தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அலகுமலை, காட்டூா் ஒரு பகுதி மற்றும் உகாயனூா்.

    முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்ேததி (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரபாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ.நகா், கூலிபாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம், நல்லூா், காளிப்பாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூரை அடுத்த பள்ளக்காட்டுப்புதூரில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக நல்லூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் பச்சை, சிமெண்ட், வெள்ளை நிறம் கலந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். அவருடைய வலது மார்பின் கீழ் பகுதியில் கருப்பு மச்சமும், வலது கால் பாதத்தின் மேல்பகுதியில் காயத்தழும்பும் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×