search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nab one more person"

    • பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் சமூகத்தினர் வழிபடும் ஜெயின் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு பூசாரி சுப்தேவ் என்பவர் கோவிலை பூட்டி சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு மூலவர் மகாவீர் சிலையின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் வைக்கப் பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்து உண்டி யலையும், நகையையும் திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மணிக்கூண்டு பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணசெட்டி தெருவை சேர்ந்த குமரேசன் (27) என்பதும், ஜெயின் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குமரேசன் கொடுத்த தகவலின் பேரில் திருட்டில் தொடர்பு உடைய வீரப்பன்சத்திரம் கொத்து க்காரர் தோட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த திருட்டு வழக்கில் கடலூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரிடம் தான் திருட்டு போன நகை உள்ளது. அந்த பழைய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட குமரேசன், தமிழ்ச்செல்வன் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×