search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam ThamilarKatchi"

    • கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில், இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சி, 5.7 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளது. விதிப்படி பாராளுமன்ற தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்தோம் என நாம் தமிழர் கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

    முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேறு நபருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கிவிட்டோம். பொது சின்னங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதுபோன்ற சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டால் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்றால் கூடுதலான வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறட்டும் என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

    இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது.

    ×