search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysteriously"

    • போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமாக இறந்தார்.
    • அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்ைடயை அடுத்த செம்பட்டியை சேர்ந்த வாலிபர் தங்க பாண்டியன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 13-ந்தேதி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் அவரை ஆஸ்பத்திரி யில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தங்க பாண்டியன் இறந்து விட்டார். அவரை போலீ சார் அடித்து கொன்று விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த மதுரை டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தங்கபாண்டியன் உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் உற வினர்கள் தங்கபாண்டியன் உடலை வாங்க மறுத்து அவரது உடல் பாகங்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று அவ ரது உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டிவனத்தில் மர்மமான முறையில் வக்கீல் கார் எரிந்து நாசமானது.
    • மர்ம நபர்கள் யாரேனும் எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விழுப்புரம்:

    திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லிக்கோண்டான் திமுக பிரமுகர். ஒலக்கூர் வழக்கறிஞர் அணி நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று இரவு ஊரல் கிராமத்தில் உள்ள தனது வயல்வெளியில் 4 சக்கரவாகனத்தை நிறுத்துவது வழக்கம். அதேபோல தனது மகேந்திரா பொலிரோ காரை நிறுத்திவிட்டு திண்டிவனத்துக்கு சென்று விட்டார். அங்கு திடீரென அந்த காரானது தீ பற்றி எரிந்தது இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக திண்டிவனம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் காரில் பரவியை தீயை அணைத்தனர். அதற்கு முன்பாக கார் முழுவதும் தீயில் கருகியது. இது குறித்து ரோசனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். வழக்கறிஞரின் கார் மர்மமான முறையில் எரிந்து நாசமானது பரபரப்பு ஏற்பட்டது.தீயை மர்ம நபர்கள் யாரேனும் எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×