search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumtaj"

    • நடிகை மும்தாஜ் 'மோனிஷா என் மோனலிசா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    • இவர் தற்போது இறைவழிபாட்டில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். தொடர்ந்து, மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.


    மும்தாஜ்

    ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி இருந்த மும்தாஜ், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். இவர் தற்போது தீவிர இறைவழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு கண்ணீர் மல்க இறைவழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    • 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.
    • இவர் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். தொடர்ந்து, மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

    ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி இருந்த மும்தாஜ், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.


    மும்தாஜ்

    மேலும், "நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். பார்த்திபன் சார், இந்த சினிமாத் துறையில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தந்தருள்வானாக" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது இணையப் பக்கத்தில், "கற்றது:பிரதிபலன் நோக்காமல் இயன்றதை செய்தல் மற்றது:செய்த உதவியை நோகாமல் மறந்துவிடல். திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் 'நாளை'என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார்.தொடர்ந்தால் யாவும் ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.


    பார்த்திபன்

    மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை, தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் சொல்வதில்லை. அவையாவும் அகத்தின் வாக்கம் கிளீனர். பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்… நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.



    சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். #MeToo #Mumtaj
    மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் கருத்து.

    ‘தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும்’ என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். மிகப்பெரிய கூட்டுமுயற்சியால் உருவாகிற சினிமாவில் தனியே ஏன் பேசவேண்டும்? என்று சிந்திக்கவேண்டும். தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படிப் பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.

    சில தருணங்களில் சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய்ப் பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார். ‘எதுக்கும் இதைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொள். தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய்ப் பொடியைத் தூவிடு’ன்னு கொடுத்திருக்காங்க. அப்போதெல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரவில்லை’ என்றார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமியின் குழந்தை நிலன் நடந்து வந்ததை பார்த்து, திருமணம் செய்து கொண்டுகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்ததாக மும்தாஜ் கூறினார். #Mumtaj
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ், ஷாரிக்கிடம் ஒரு தாயைப் போல பாசம் காட்டினார். 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் மும்தாஜுக்கு தற்போது 38 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர் விஜயலட்சுமியின் மகனை பார்த்தபோது, தனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    ‘பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மகனைப் பார்த்த உடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.



    விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்தது’ எனக் கூறியுள்ளார். ஆனால் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார். #Mumtaj

    ×