என் மலர்
நீங்கள் தேடியது "MoU sign"
- ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ இன்க் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைய தளம் வாயிலாக கையெழுத்தானது.
- ஒப்பந்தத்தின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பன்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுகாதார தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ இன்க் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைய தளம் வாயிலாக கையெழுத்தானது.
இதன் வாயிலாக திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள மருந்தாகவியல் தொழில்நுட்பத் துறையில் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் துல்லியமான மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான ஒரு ஆராய்ச்சி முன்னேற்ற மையம் நிறுவப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பன்முகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும், இப்பயிற்சியின் வாயிலாக ஆராய்ச்சி மேம்பாட்டை எளிதாக்கும் வகையில் ஆர்.எக்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் உயர்தொழில்நுட்ப அதிநவீன டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த முடியும்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி இணையதள வாயிலாக தொடக்க விழா மற்றும் பன்முக பயிற்சி நடைபெற உள்ளது.
- இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சிக்கு மத்திய மந்திரி பாராட்டு
- கால்நடைகளுக்கான தோல் நோயை கட்டுப்படுத்த, தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது
கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.
இந்த தடுப் பூசியை வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கால்நடை பராமரிப்புதுறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் முன்னிலையில் இது கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ரூபாலா, உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆட்டு அம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
மாடுகள் உள்பட வீட்டு விலங்குகளுக்கு தோல் நோயை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை காலதாமதமும் இல்லாமல் பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்று புனேயில் உள்ள கால்நடை மருத்துவ உயிரியல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.






