search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moscow Concert Hall Attack"

    • நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
    • 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு சென்றிருந்த 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 152-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற டாலர்சோன் மிர்சோயேவ் (வயது 32), சைதாக்ரமி (30), சம்சுதீன் பரிதுனி (25) மற்றும் முகமது சோபிர் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இருவர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
    • கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    அப்போது, அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

    இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

    முதற்கட்டமாக, இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

    60 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது.

    இந்நிலையில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. 

    இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

    இதற்கிடையே, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் கார் துரத்தலை தொடர்ந்து, கொடிய தாக்குதலை நடத்திய நான்கு பயங்கரவாதிகள் உட்பட 11 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நான்கு துப்பாக்கி ஏந்தியவர்கள் உட்பட, இந்த கொடிய தாக்குதலை நடத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    • இசை அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
    • மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

    இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

    இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

    60 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

    ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×