என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "moose hunting deer"

    • கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    • கரை ஓரத்தில் ஏராளமான எலும்பு கூடுகள் கிடக்கின்றன.

    ஊட்டி

    ஊட்டி அருகே மார்லிமந்து வன பகுதிக்கு வந்துள்ள 35 - க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம் கடமான்களை வேட்டையாடும் சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி அருகே உள்ள மார்லிமந்து அணை பகுதியை சுற்றி அதிக வனப்பகுதி உள்ளது. அதில் புலி, சிறுத்தை, காட்டுபன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மார்லிமந்து அணையில் உள்ள தண்ணீர் ஊட்டி நகரின் குடிநீராக வினியோகம் செய்யபட்டு வருகிறது.இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் வாழக்கூடிய அரிய வகை செந்நாய்கள் மார்லிமந்து வனபகுதிக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன. சுமார் 30-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கொண்ட அந்த கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது கடமான்களை வேட்டையா டி வருகிறது.அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அணையின் கரையோ ரத்திற்கு வரும் செந்நாய்கள் தண்ணீர் குடிக்க அணைக்கு வரும் கடமான்களை அடித்து கொன்று தின்று வருகின்றன.இதனால் அணையின் கரை ஓரத்தில் ஏராளமான எலும்பு கூடுகள் கிடக்கின்றன. செந்நாய்கள் கூட்டம் கடமான்களை வேட்டையாடுவதை கண்டு மார்லி மந்து பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதே நிலை தொடர்ந்தால் செந்நாய்கள் கிராம மக்கள் வளர்த்து வரும் கா ல்நடைகளை வேட்டையாட வாய்ப்பு உள்ளதால் வனத்து றையினர் அந்த செந்நாய்களை கண்காணிக்க வேண்டும் என்றும் வேட்டையாடிய மான்களின் உடல்கள் தண்ணீருக்குள் கிடப்பதால் தண்ணீர் மாசடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். 

    ×