search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molesting women"

    சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய டாக்டரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜெகதீப் சிங் அரோரா (வயது 46). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தன் மனைவி மற்றும் 11 வயதான மகளுடன் சிங்கப்பூருக்கு சென்றார். பிரபல சுற்றுலா தலம் ஒன்றில் உள்ள ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி நா பெங் ஹாங் உத்தரவிட்டார்.

    குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரோராவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது எல்லாம் சேர்த்து தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தான் பெரிய தவறு செய்து விட்டதாக கோர்ட்டில் அரோரா தெரிவித்தார்.

    ×