என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Missing Teen"
- பூங்காவிற்கு வருபவர்களில் பலர் தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்
- சார்லோட் கடைசியாக ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் காலணி அணிந்திருந்தாள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது சரடோகா கவுன்டி பகுதி.
இங்கு சுமார் 6250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மோரு ஏரி மாநில பூங்கா (Moreau Lake State Park) எனப்படும் இயற்கை எழில் மிகுந்த சிறிய வனப்பகுதி. இயற்கை காட்சிகளும், பெரிய ஏரியும், அழகான மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும் உள்ளதால் இப்பகுதிக்கு பொழுதுபோக்கவும், அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சுற்றி பார்க்கவும் மக்கள் வருவது வழக்கம்.
அவ்வாறு சில தினங்களுக்கு முன் பொழுது போக்க ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வந்திருந்தனர். சார்லோட் சேனா எனும் அவர்களின் 9 வயது மகள் நேற்று முன் தினம் தனது சைக்கிளில் சுற்றி வர கிளம்பினார். கிளம்பி சென்றும் நீண்ட நேரம் திரும்பி வராததால் அவள் பெற்றோர் கவலையடைந்தனர்.
அச்சிறுமியின் தாய் த்ரிஷா, அவசர சேவை எண் 911-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையினை தொடங்கினர்.
விசாரணையில் அச்சிறுமியை அங்குள்ள லூப் ஏ (Loop A) பகுதியில் கடைசியாக அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் (Croc) காலணியுடன் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு பிறகு என்னவானார் என தெரியவில்லை.
இது குறித்து நியூயார்க் நகர கவர்னர் கேதி ஹோசல் தெரிவித்ததாவது:
அச்சிறுமியை தேடும் பணியில் 75 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாய்கள், விமான சேவை, வேட்டை நாய்கள் என அனைத்துவிதமான வளத்தையும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்வேறு சிறப்பு அதிகாரிகளும் இதில் பங்கு பெற்றுள்ளனர். டிரோன் சேவை, மற்றும் நீருக்கடியில் சென்று மீட்கும் படை சேவை உட்பட எல்லாவித வளங்களையும் உபயோகபடுத்தியுள்ளோம். பூங்காவில் அச்சிறுமி காணாமல் போன போது பரிமாறி கொள்ளப்பட்ட செய்திகள் குறித்தும் ஆராய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எந்த சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் தேடி வருகிறோம்.
இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.
5 அடி 1 அங்குலம் உயரமும் 40 கிலோ எடையும் உள்ள அச்சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. அப்பகுதி முழுவதும் ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படும் குழந்தைகள் கடத்தல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நபவுலா பகுதியில் ஒரு புல் பாதையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.
- இந்த நடவடிக்கை வட டாஸ்மேனியாவின் மிகப்பெரும் தேடுதல் வேட்டை என கருதப்படுகிறது
ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியாவில், ஷையான்-லீ டாட்னெல் (Shyanne-Lee Tatnell) எனும் 14-வயது சிறுமி காணாமல் போனார். கடைசியாக ஏப்ரல் 30-ம் தேதி லான்செஸ்டன் பகுதியில் 8:30 மணியளவில் ஷையான் காணப்பட்டார்.
இந்நிலையில் நபவுலா பகுதியில் ஒரு புல் பாதையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இது ஷையான் உடல் என நம்பப்படுகிறது. தடயவியல் சோதனைக்கு பின்புதான் உறுதி செய்யப்படும். இது சம்பந்தமாக ஸ்காட்ஸ்டேல் பகுதியை சேர்ந்த 36 வயதான ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
"எங்களுக்கு விடை கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம். ஸ்காட்ஸ்டேல் மற்றும் நபவுலா பகுதியிலுள்ள சில இடங்களை குற்றம் சம்பந்தப்பட்ட பகுதிகளாக நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். இந்த இரு இடங்களுக்கும் ஒரு கிரிமினல் தொடர்பிருக்கிறது என நம்புகிறோம். இது சம்பந்தமாக எங்களின் நீண்ட விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கிய டஸ்மேனிய மக்களுக்கு எங்கள் நன்றி", என இது குறித்து வட மாவட்ட ஆணையர் கேட் சேம்பர்ஸ் தெரிவித்தார்.
வட டாஸ்மேனியாவின் மிகப்பெரும் தேடுதல் வேட்டை என கருதப்படும் இந்த நடவடிக்கையில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் மாநில அவசர உதவி சேவை மட்டுமின்றி தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஒரு நாள் என் நிலையில் இருந்து பார்த்தால்தான் உங்களுக்கு உண்மை புரியும்" என தனது மகளை தவறாக சித்தரிக்கும் சில சமூக வலைதள பதிவுகளை குறித்து அந்த சிறுமியின் தாயார் முகநூலில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அம்மாநிலம் முழுவதும் இந்த சிறுமியின் வழக்கை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்