என் மலர்
நீங்கள் தேடியது "minister house"
- சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.
- கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரைதேசிய கொடியை முகப்புப்படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
சிவகாசி
75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
இதேபோல், இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தேசியக் கொடி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.
சுதந்திர தின விழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டில் இன்று காலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன். சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






