search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk vendor killed"

    • பஸ் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி பால் வியாபாரி பலியானார்.
    • உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் உள்ள பெரிய செம்மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரூபன் (வயது 18). வீடுகள், கடைகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார். இன்று காலை பால் விநியோகம் செய்வ தற்காக மோட்டார் சைக்கி ளில் சென்றார்.

    அதே வேளையில் கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு (35) பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ரூபன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ரூபனின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து எதிரே வந்த அரசு பஸ் சக்கரத்திற்குள் சிக்கியது. இதனால் படுகாயமடைந்த ரூபனை அங்கிருந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விஷ்ணுவும் படுகாய மடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×