search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mesut Ozil"

    ஜெர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். #MarioGomez
    பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் மரியோ கோமஸ்.

    ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணியில் மரியோ கோமஸ் இடம்பிடித்திருந்தார். இவருடன் பல முன்னணி அனுபவ வீரரகள் இடம்பிடித்திருந்தனர். உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.



    அந்த அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 33 வயதாக மரியோ கோமஸும் ஓய்வு பெற்றுள்ளார்.

    2007-ல் இருந்து ஜெர்மனி அணிக்காக விளையாடி வந்த கோமஸ் 78 போட்டிகளில் விளையாடி 31 கோல் அடித்துள்ளார். தனது ஓய்வு குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கோமஸ், ‘‘தற்போது நான் ஓய்வு முடிவை அறிவிக்கும் நேரமாகும். இது திறமையுள்ள ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களுடைய கனவை நனவாக்க வாய்ப்பாக அமையும்’’ என்றார்.
    இனவெறி தாக்குதல் நடைபெற்றதாக ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை துருக்கி அதிபர் பாராட்டியுள்ளார். #MesutOzil
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 2014 சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது. ஜெர்மனி அணியில் 29 வயதான மெசுட் ஒசில் இடம்பிடித்திருந்தார். இவரது பூர்வீகம் துருக்கியாகும். உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்திருந்தார்.

    இந்த போட்டோவை வெளியிட்டு ஜெர்மனி அணிக்காக விசுவாசமாக விளையாடினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அணியின் முதன்மை அதிகாரிகளில் சிலர் எர்டோகனுடன் சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டிறிந்தனர்.

    இதனால் மனமுடைந்த மெசுட் ஒசில் ஜெர்மனி அணியில் அருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ‘‘நான் மெசுட் ஒசில் உடன் போனில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது. இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஒசிலின் கண்களில் முத்தமிட்டேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஜெர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ஜெர்மனி கால்பந்து அணியின் அட்டக்கிங் மிட்பீல்டரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #MesutOzil
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறிது.

    இதனால் ஜெர்மனி வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது. குறிப்பாக 29 வயதாகும் மெசுட் ஒசில் மீது வார்த்தை தாக்குதல் நடத்தப்பட்டது. மெசுல் ஒசிலின் பூர்விகம் துருக்கியாகும். கடந்த மே மாதம் அவர் துருக்கி அதிபரை சந்தித்திருந்தார். இதுகுறித்த படத்தை வெளியிட்டு, ஜெர்மனிக்கு விசுவாசமாக ஒசில் விளையாடினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டகப்பட்டது.



    இந்நிலையில் தன்மீது இனவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், அவமதிப்பு செய்ததாகவும் உணர்கிறேன். இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ×