என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant money cheating"

    திருமங்கலம் அருகே வியாபாரியிடம் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில், விளைபொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டப்பட்ட குடோன் உள்ளது. இதனை கோர்வை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் மதுரையைச் சேர்ந்த பாரதி (41) என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுண்டல் உள்ளிட்ட பல தானியங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் நாட்டில் இருந்து கண்டெய்னர்களில் வரவழைக்கப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரத்து 50 கிலோ கருப்பு சுண்டல், 80 ஆயிரத்து 130 கிலோ வெள்ளை சுண்டல் போன்றவை குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் ரெங்கராஜ் புகார் மனு அளித்துள்ளார். அதில், பங்குதாரர் பாரதி, அவரது நண்பர்கள் விருதுநகரைச் சேர்ந்த பிரேம்குமார், மரிய பாஸ்கர், கற்பகராஜ், புதுக்கோட்டை தமிழரசன், முதுகுளத்தூர் ஜெயச்சந்திரன், சென்னை கொடித்தோப்பு குணசேகர் ஆகியோர் சென்னை அக்ரோ நிறுவனம் பெயரில் குடோனில் இருந்த ரூ.2 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரத்து 400 மதிப்பிலான சுண்டலை கொள்முதல் செய்தனர்.

    இதற்காக ரூ.17 லட்சம் முன் பணம் கொடுத்த அவர்கள், மீதிப்பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர்.

    பலமுறை கேட்டும் 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

    புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரயாஸ். ஆன் லைன் மூலம் அரிசி, புளி என மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரை கோவையை சேர்ந்த சிலர் ஆன் லைனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு மொத்தமாக புளி அனுப்பி வைக்கும் படியும் அதற்கான பணத்தை செலுத்தி விடுவதாகவும் கூறினர்.

    இதனை நம்பி ரயாஸ் சுமார் 10 டன் புளியை வேன் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். இதன் மதிப்பு ரூ. 10 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    அதன் பின்னர் ரயாஸ் பணத்தை கேட்டார். ஆனால் கோவையை சேர்ந்த கும்பல் பணம் கொடுக்கவில்லை. பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து ரயாஸ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரயாசுக்கு பணம் கொடுக்காமல் மிரட்டியதாக கோவை பாப்பநாயக்கன் பாளையம் கோபி (36), விமல் (27), சாய்பாபா காலனி சிவராஜ் (41), கிராஸ்கட் ரோடு மகேஷ் (41), சஞ்சய் (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    ×