என் மலர்
நீங்கள் தேடியது "Membership Forms"
- நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, 19-ந்தேதி க்குள் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக் கிணங்க அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்வ தற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக்கெடு வருகிற 19-ந்தேதி அன்று மாலை 5 மணி வரை நீட்டித்து இறுதி யான கால அவகாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, 19-ந்தேதி க்குள் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கு மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே, கட்சி பொறுப்புகளில் நிய மனம் செய்யப்பட்டு பணி யாற்றுவதற்கும், அமைப்புத் தேர்தல்களில் போட்டியி டுவதற்கும், வாக்களிப்ப தற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






