search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meal Maker Kurma"

    சப்பாத்தி, நாண், தோசை, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல் மேக்கர் - 1 கப்
    பெ.வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் நீரை வடிகட்டி மீல் மேக்கரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

    ஓரளவு வெந்ததும் மீல் மேக்கர், தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    ருசியான மீல் மேக்கர் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×