search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markasius School"

    • மர்காஷியஸ் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 372 சதுரங்க ஆட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

    நாசரேத்:

    ஒய்.எம்.சி.ஏ. சர்வதேச அமைப்பின் நிறுவனர் ஜார்ஜ் வில்லியம்ஸ் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு நாசரேத் ஒய்.எம். சி.ஏ. நிர்வாகம், நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் துத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மர்காஷியஸ் பள்ளியில் நடைபெற்றது.

    நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷியஸ் சபை மன்ற தலைவர் வெல்டன் ஜோசப் ஜெபம் செய்தார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம் குமார் ராஜாசிங் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை பாதிரியார் மர்காஸிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்தார். நாசரேத் மர்காஷியஸ் பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். நாசரேத் ஓய். எம்.சி.ஏ.தலைவர் எபனேசர், துத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. நிர்வாக குழு உறுப்பினர் சுந்தரராஜ் வரவேற்றார். தூத்துக் குடி- நாசரேத் திருமண்டல தொடர்பு அதிகாரி ஜாண் சன், மர்காஷியஸ் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன் பிரேம்குமார், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, நகர தி.மு.க. பிரமுகர் ரவி, நாசரேத் மெர்க்கண்டைல் வங்கி கிளை உ தவி மேலாளர் தங்கபாண்டி ராஜகுமார், தொழிலதிபர் செந்தில்குமார், நகர காங்கிரஸ் பிரமுகர் கெர்சோம் கிறிஸ்டியான் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. செயலர் சாமுவேல் ராஜ் நன்றி கூறினார்.

    இதில் 70 பள்ளி, கல்லூரிகளில் இருந்து 372 சதுரங்க ஆட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் ஓய்.எம்.சி.ஏ. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், பர்னபாஸ் ஜெயக் குமார், ஆம்ஸ்ட்ராங் மற்றும் நிர்வாகிகளும் நாசரேத் மர்காஷியல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    ×