என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon Competitions"

    • 5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகளில் கலந்து கொண்ட தலா 7 பேருக்கு சிறப்பு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டிகள் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் பாளையில் இன்று நடத்தப்பட்டது.

    போட்டியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாராத்தான் போட்டிகளை நெல்லை மாவட்ட பயிற்சி கலெக்டர் கிஷன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக பிரிவு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் வழியாக சீனிவாச நகர் பாலம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது.

    5 கிலோமீட்டர் பயணத்தை கல்லூரி மாணவ- மாணவிகள் ஓடி நிறைவு செய்தனர். மாணவர்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஜான்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் சாரா டக்கர் கல்லூரியை சேர்ந்த மாணவி முதல் பரிசையும் பெற்றனர்.

    முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்க பணமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் ரொக்க பணமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட தலா 7 பேருக்கு சிறப்பு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×