என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manvendra Singh"

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. மன்வேந்திரா சிங் இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #BJP #ManvendraSingh #Congress
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சிலர் கட்சி தாவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான மன்வேந்திரா சிங் இன்று காலை திடீரென்று டெல்லி வந்தார்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டுக்கு சென்ற அவர் பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது இந்த முடிவின் பின்னணி தொடர்பாக விரிவான தகவல் வெளியாகாத நிலையில், நான் எந்த கட்சியில் இருந்தாலும் எனது ஆதரவாளர்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள் என மன்வேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

    இன்று கட்சி தாவிய எம்.எல்.ஏ. மன்வேந்திரா சிங் முன்னர் பா.ஜ.க. தலைமையிலான வாஜ்பாய் அரசில் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த ஜஸ்வந்த் சிங்-கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #ManvendraSingh  #Congress
    கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் விலகுவதாக ஐஸ்வந்த்சிங் மகனான மனவேந்திரசிங் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #ManvendraSingh #BJP
    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஐஸ்வந்த்சிங். 80 வயதான இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    ஐஸ்வந்த்சிங்கின் மகன் மனவேந்திரசிங் ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கும் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    வசுந்தரா நடத்திய பேரணியை புறக்கணித்துவிட்டு தனியாக பேரணி நடத்தப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் பா.ஜனதாவில் இருந்து விலகலாம் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில் மனவேந்திரசிங் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் பா.ஜனதாவில் சேர்ந்ததே மிகப்பெரிய தவறு. சுயமரியாதைக்காக அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளேன். எனது ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. காங்கிரசில் இணையும் திட்டம் எதுவும் இல்லை.

    வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நான் எனது சொந்த ஊரான பார்மர் தொகுதியில் போட்டியிடுவேன்.

    இவ்வாறு மனவேந்திரசிங் கூறியுள்ளார்.

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஐஸ்வந்த்சிங் மகன் ஆதரவாளர்களுடன் விலகியது பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. #JaswantSingh #ManvendraSingh #BJP
    ×