search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manoj pandiyan MLA"

    • கடையம் யூனியன் கீழக்கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்யாணிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் உணவு கூட அறைக்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
    • விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்யாணிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் உணவு கூட அறை, மந்தியூர் ஊராட்சி பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் களம் அமைப்பதற்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஆலங்குளம் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் விருதுநகர் மேற்கு மாவட்ட செய லாளர் கதிரவன், தலைமை கழக செய்தி தொடர்பாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் ராதா, மாநில தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், இளங்கோ, கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் நுருல் ஹமீர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் விஜய், திரு ஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்து படுகாய மடைந்த வைகுண்ட மணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்து படுகாய மடைந்த வைகுண்ட மணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை நேற்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    அப்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.டி.காமராஜ், நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் தளவை சுந்தரராஜ், ராஜவேல், இளங்கோ, எம்.எம்.சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் பால்கனி, நிர்வாகிகள் குபேந்திரா மணி, ராதா, சீவலப்பேரி முருகேசன், பால்பாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×