என் மலர்
நீங்கள் தேடியது "Mannady"
ராயபுரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்று போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
மண்ணடி, ராமசாமி தெருவில் உள்ள விடுதியில் சோதனை நடத்திய போது தென்காசியை சேர்ந்த நாகூர் மெய்தீன் என்பவர் தங்கி இருந்தார்.
அவர் வைத்திருந்த பையில் ரூ. 3½ லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணத்துக்கான ஆவணம் நாகூர் மொய்தீனிடம் இல்லை.
இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி நாகூர் மொய்தீனிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #LokSabhaElections2019
ராயபுரம்:
சென்னை மண்ணடி பகுதியில் மான் கொம்பு கடத்தப்படுவதாக பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டுகள் முரளி, நவ்சப்பாஷா, முகமது, யாசியா ஆகியோர் ஏழு கிணறு தெருவில் ஒரு ஏ.டி.எம். வாசலில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவரது பெயர் முகமது ஆரிப் என்று தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளில் 1 அடி நீள முள்ள மான் கொம்பு இருந்தது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
அந்தமான் கொம்பை மண்ணடி செயின்ட் சேவியர் தெருவில் உள்ள டீக்கடை கேஷியர் கிருஷ்ணன் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரையும் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.






