search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimaran gave prizes"

    • கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு மணிமாறன் பரிசு வழங்கினார்.
    • கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம், ஆறுதல் பரிசு ரூ.1000 மணிமாறன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் பாண்டி முருகன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன்.ஒன்றிய செயலாளர்கள் தன பாண்டியன், மதன் குமார், ராமமூர்த்தி, நாக ராஜன், பாண்டியன், ஆலம் பட்டி சண்முகம், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறு்ப பாளர் பாசபிரபு, திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், மாவட்ட அணி அமைப்பாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×