search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangoes Seized"

    • 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்த 10½ டன் மாம்பழத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    கோயம்பேடு பழ மார்க்கெட்டில் மாம்பழங்கள் எத்திலின் என்கிற ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை 3மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் மார்க்கெட் மேனேஜிங் கமிட்டி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திலின் ரசாயனம் மூலம் செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அந்த கடைகளில் இருந்த 10½ டன் எடை கொண்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்குள் மறைத்து வைத்திருந்த 5 கிலோ எத்திலின் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் கோயம்பேட்டில் உள்ள உணவு கிடங்கிற்கு கொண்டு சென்று அழிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாம்பரத்தில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 7½ டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    தாம்பரம்:

    தாம்பரம் ராஜாஜி ரோடு, காந்தி சாலை, கக்கன் தெரு பகுதியில் உள்ள பழக்கடைகளில் இன்று காலை காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் ரசாயன பவுடர் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த சுமார் 7½ டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதனை லாரியில் ஏற்றிச்சென்று குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். அதிகாரிகளின் சோதனைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×