search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangalya Pooja"

    • கொடை விழா முன்னிட்டு 108 திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது.
    • மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    ஏரல் அருகே உள்ள மொட்டத்தாதன் விளையில் உச்சிமாகாளி அம்மன் கோவில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா முன்னிட்டு 108 திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா தலைமை தாங்கினார். அம்மன் கலைக்குழு நற்பணி மன்ற இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ‌கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா செய்திருந்தார்.

    ×