search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malavika"

    பிரபல நடிகை ஒருவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    தமிழில் அஜித் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ஆகிய பாடல்களில் மாளவிகாவின் நடனம் பேசப்பட்டது.

    திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீவா, சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    மாளவிகா
    மாளவிகா

    மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறும்போது, ‘‘நான் கடைசியாக விஜய்யின் குருவி படத்தில் நடித்தேன். முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயானேன். அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் கோல்மால் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறேன். நல்ல கதாபாத்திரம். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
    உன்னைத்தேடி, வெற்றி கொடிகட்டு, திருட்டு பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா, இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறியிருக்கிறார். #Malavika
    அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்... பாடலில் நடனம் ஆடி பிரபலமானார். ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

    10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறியதாவது:-



    “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன்.

    மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.”

    இவ்வாறு மாளவிகா கூறினார்.
    ×