search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra state"

    • வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாட்டில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மும்பை உயர் நீதிமன்றத்தின் (நாக்பூரில் உள்ள பெஞ்ச்) வழிகாட்டுதலின்படி, மகாராஷ்டிராவின் 30-அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலின்போது பாஜக தொண்டர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் மொகல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் மதீன் பட்டேல் (வயது 48). பாஜகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த இவரும், அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு அரசியல் கட்சியினருக்கும் இடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மதீன் பட்டேல் தரப்பினருக்கும், எதிர்தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது, இரும்பு பைப் மற்றும் கம்புகளால் மதீன் பட்டேல் மற்றும் அவரது தரப்பினர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மதீன் பட்டேல், பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ஹிதாயத் பட்டேல் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மொகல்லா கிராமத்தில் பதற்றமான சூழல் உருவானது. போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 
    ×