என் மலர்
நீங்கள் தேடியது "Lower Bhawani canal"
- கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள நரிப்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார், வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டரா? என விசாரித்து வருகின்றனர்.






