search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loud speaker"

    • மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.
    • 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

    கோவை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.

    பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை கலெக்டரை நேரில் சந்தித்து அளித்தனர். இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஒலிபெருக்கியை பறித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வேடப்பட்டி சத்யா நகரை சேர்ந்த ஜெகநாதன்(வயது55) என்பதும், ஆடு மேய்க்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    அவர் தனது வீட்டில் 15 ஆடுகளை வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடுகளில் 5 ஆடுகளை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 பேர்விஷம் வைத்து கொன்றனர்.

    இதுகுறித்து ஜெகநாதன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனக்கு இழப்பீடு வழங்க கோரி 2019-ம் ஆண்டு முதல் பல தடவை மனு அளித்தும் இழப்பீடு வழங்காததால் தனது கோரிக்கை கலெக்டருக்கு கேட்கும் வகையில் ஒலிபெருக்கியுடன் வந்ததாக தெரிவித்தார்.

    சென்னையில் மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, ஜி.பி.எஸ். கருவிகள் விரைவில் பொருத்தப்படுகிறது. #MTCBus
    சென்னை:

    சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 37 லட்சம் மாநகர, புறநகர் பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 810 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் தினமும் 6.25 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

    போக்குவரத்து கழகத்தின் சிக்கன நடவடிக்கையாக மாநகர், புறநகர் பஸ்களை கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்னை மாநகர் பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பஸ்களில் விரைவில் தானியங்கி ஒலி பெருக்கி வசதி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ் நிறுத்தங்கள் வரும்போது இந்த தானியங்கி ஒலி பெருக்கி தானாகவே அறிவிக்கும். ஜி.பி.எஸ். கருவி மூலம் இது செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் ஒவ்வொரு நிறுத்தங்கள் வரும்போது முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியாகும். அதுபோல மாநகர பஸ்களிலும் இந்த அறிவிப்புகள் வெளியாகும்.


    பயணிகள் இந்த அறிவிப்பின் மூலம் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம். எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

    இதேபோன்ற வசதிகளை மதுரை, கோவையில் மாநகர், புறநகர் போக்குவரத்து கழகங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ் பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். போக்குவரத்து கழக செயலாளர் டேவிதார் இதற்கான வசதிகளை மாநகர பஸ்களில் அமல்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். #MTCBus
    ×