search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry water"

    சின்னாளப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டால் லாரி தண்ணீரை மக்கள் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிக்கு மட்டும் பேரணை மற்றும் காமராஜர் அணை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் சின்னாளபட்டி பகுதி மக்களுக்கு வாரம் 1 முறை நல்ல தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    ஆனால், சின்னாளபட்டியை சுற்றியுள்ள காந்திகிராமம், கலிக்கம்பட்டி, செட்டியப்பட்டி, அம்பாத்துரை, பஞ்சம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தொப்பம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வெள்ளோடு ஆகிய ஊராட்சிகளுக்கும், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் நீடித்த குடிநீர் திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

    கடந்த 3 மாதமாக கிராம பகுதிகளில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் வற்றி விட்ட நிலையில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாமல் தவிக்கிறது. கிடைக்கும் கொஞ்ச நீரை மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்தற்கு ஒருமறை என சப்ளை செய்கிறது. இதனால் தினசரி தேவைகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் குடம் ஒன்றுக்கு ரூ. 5 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தண்ணீரை விற்பதற்காகவே இக்கிராமங்களில் தண்ணீர் லாரிகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. குடிப்பதற்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடம் ஒன்றுக்கு ரூ. 10 ம், மற்ற தேவைகளுக்கான தண்ணீர் குடம் ஒன்றுக்கு ரூ. 5 என விற்பனை நடக்கிறது.

    எனவே, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாடுக்கு வரும் வரையில் இப்பகுதி மக்களுக்கு கிராமத்திற்கு தினமும் 5 லாரிகள் வீதம் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம் அருகே லாரிகளில் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காதில் பூ சுற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ளது பேய்க்கரும்பு, செம்மடம், அய்யாண் குண்டு கிராமங்கள். இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து டேங்கர் லாரிகளில் வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    எனவே டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் நுகர்வோர் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறிப்பிட்ட அளவுதான் தண்ணீர் எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தமிழக மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமையில் கிராம மக்கள் காதில் பூ சுற்றி ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி தாசில்தார் சந்திரனிடம் மனு கொடுத்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 11-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews

    ×